Wednesday, May 6, 2009

தாய்மொழியாம் தமிழை பாதுகாப்போம்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்கு உரிய நம் தமிழ் மொழிக்கு எந்த அபாயமும் வராது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.....

ஆனாலும் கடந்த 3 தலைமுறைகளில் மட்டும் சுமார் 200 மொழிகள் மறைந்துவிட்டன....
இல்லை இல்லை அழிந்துவிட்டன....

மேலும் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நமது இளைய தலைமுறை அதிக ஆர்வம் காட்டி வருவது கவலை அளிக்கிறது.....

இந்த நிலை நீடித்தால் "மெல்லத் தமிழ் இனி சாகும்" என்ற பாரதியின் கூற்று உண்மையாகிவிடும்.

எனவே நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாப்பது மட்டுமின்றி.... அதனை மேலும் வளர்க்க பாடுபடுவது என்று....
உலக தாய்மொழி தினமாகிய மாசி மாதம் 21ம் திகதியிலிருந்து உறுதியேற்போம்.....

தமிழுக்கு அமுதென்று பெயர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நிகர்..

வாழ்க தமிழ்..... வளர்க அதன் புகழ்.

No comments:

Post a Comment