Saturday, December 25, 2010

வணக்கம் உறவுகளே


வணக்கம் உறவுகளே (அழுவதற்கும் விழுவதற்குமானதல்ல மனித அவதாரம் !)
இந்த கவிதை ஒரு புனலாய்வு பிரிவு போராளியல் எழுதப்பட்ட ஓர் கவிதை
அந்த போராளியின் கவிதையை சில பேர் மாத்தி எழுதி வெளியிட்டுள்ளனர் .
(போர்க்களத்தில் போராளிகள்/தீவிரவாதிகள்) என்று குறிப்பிட்டு உள்ளார் )
அது தவறானது இதன் உண்மை வடிவம் இணைத்துள்ளேன்

அழுவதற்கும் விழுவதற்குமானதல்ல மனித அவதாரம் !
விடுதலை என்ற விமோசனமே உண்மை வாழ்வின் ஆதாரம் !
ஆயுதம் வாழ்வை காக்குமென்பது ஆண்டவனை பார்த்தாலே தெரியும்
அந்நியம் வெல்லப்படும் போதுதான் சுதந்திரத்தின் சுகம்புரியும் !
ஏந்திய கருவிகள் தான் எங்களை காக்குமென்று!
தீப்பெழுதி வைத்திருக்கிறது தேசம்
போர்க்களத்தில் புலிகள் என்றகாலம்மாறி
போராடும் வீரத்தில் தமிழீளமே தடம் பதிக்கிறது
வீடியப்போகும் நாளைய ஈழத்திற்காக
தோள் கொடுக்கும் இன்றைய தோள்கள்
ஈழத்தின் சுதந்திர தினமன்று உரிமையோடும் பெறுமையோடும்
உன்னதமாய் ஆனந்தப்பட்டு அர்ந்தம் கொள்ளும்.

No comments:

Post a Comment